கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன் .
இன்று நாம் எப்படியாவது ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று மாயையானவைகளையும், தவறானவைகளையும் நாடி தேடி விடுகிறோம் . ஒரு முறை வட இந்தியாவில் நடைபெற்ற ஊழியத்தின் போது, ஊழியரின் தாயாருக்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டார்கள். அந்த தாயாரின் கால்கள் பெலவீனமடைந்திருந்தது. ஜெபிக்க ஆரம்பித்தவுடன் அந்த தாயாரில் போராடின ஆவி அதிகமாக வேதனைப்படுத்த ஆரம்பித்தது. கடைசியில் ஒரு யானையின் துதிக்கை தெரிந்தது. அதை கடிந்து கொண்டேன். தெளிவடைந்தார்கள். அப்பொழுது அவர்களிடம் யானையின் துதிக்கை உங்களைத் தொட எதாவது செய்தீர்களா? என்று கேட்டேன். ஆம் யானை ஆசீர்வதிக்க இடம் கொடுத்தேன் என்றார்கள் .
இன்று அறியாமையினால் உங்களை ஆசீர்வதிக்கும் கர்த்தரை விட்டு தவறான பழக்க வழக்கங்களுக்கு இடம் கொடுப்பதால் கேடான காரியங்கள் நடைபெறுகிறது. நாம் இன்று முதல் கர்த்தரையே நம்புவோம். மெய்யான நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ்வோம்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ.C.எபனேசர் பால் .