"...அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்."

                                                                                                                       சங்கீதம் 37:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

என் மூத்த மகன் 12ம் வகுப்பு படிக்கும் போது இயேசுகிறிஸ்துவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் வழி நடக்க தன்னை ஒப்புக் கொடுத்தான். வீட்டில் நான் தங்கியிருந்த அறைக்கு நேராக முதல் மாடியில் என் அறைக்கு நேராக மேலாக அவனது அறை இருந்தது. ஒரு நாள் காலை நேரத்தில் தன் வாழ்வில் தன் நண்பர்களைத் தவிர்க்க ஜெபம் செய்தான். ஒரு சைக்கிள் இருந்தால் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் நேராக வந்து விடலாமே, நண்பர்களைக் காணவும், வீணாணகாரியங்களில் ஈடுபடாதபடி காத்துக்கொள்ளவும் முடியும் என்று உணர்ந்து அவன் தன் ஜெபத்தில் சைக்கிள் வேண்டும் என்று ஜெபித்தான். எனது காலை நேர ஜெபத்தில், கர்த்தரின் சமுகம் காத்திருந்த போது தேவ ஆவியானவர் உன் மகனுக்கு இன்றே ஒரு சைக்கிள் வாங்கிக்கொடு என்றார். அதற்கு ஆயத்தமாக வீட்டிலிருந்த ரூபாய்களை எடுத்துக்கொண்டு அதே பள்ளியில் பணியாற்றிய நான், இன்று உனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தர இருக்கிறேன். பள்ளிக்கூடம் முடிந்தவுடன் நான் இருக்கும் இடத்திற்கு வா என்று கூறினேன். அவ்வாறே அவன் வந்தான். அவனுக்கு ஒரு புது சைக்கிளை வாங்கிக்கொடுத்தேன். காலையில் தான் ஜெபித்தேன். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டார். எனக்கு ஒரு சைக்கிளையும் கொடுத்தார் என்றான்.

அன்பான சகோதரனே, சகோதரியே நம்மை நேசிக்கிற அன்பின் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமது சிறிய பெரிய ஜெபங்களைக் கேட்டு பதில் தருகிறவராயிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவரை நேசித்து பரிசுத்தமாக அவர் வழி நடக்க உன்னை ஒப்புக் கொடுக்கும் போது, நம்மில் அன்பு கூறுகிறவர் உடனே பதில் தருகிறவராக இருக்கிறார். இந்தப் புதிய ஆண்டில் பிரவேசித்திருக்கிற நாம் நம்மை எப்படி பரிசுத்தமாக வாழ பிரித்தெடுத்த வாழ்க்கையில் நிலைத்திருக்க நாம் வேண்டுகிற காரியத்திற்கு அவர் உடன் பதில் தருவார். அவர் அன்பு நிறைந்தவர். அந்த அன்பை அளவிடவோ, ஒப்பிடவோ முடியாது. என் மகன், என் மகள் பரிசுத்தமாக வாழ என்னிடம் வேண்டிய காரியத்தை நான் செய்வேனென்று உன்னை எல்லா பாவ சோதனைக்கும் விலக்கிக்காக்க அனுகூலமான காரியத்தை உனக்குச் செய்வார். நீ விரும்புகிறதற்கு மேலாக பூரணமாய்ச் செய்வார். இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்று கேட்டுக்கொண்டிருக்கிற பலரின் தீர்க்கதரிசனங்களின் வார்த்தைகளில் கலங்காது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை நேசிக்கிறவர்.

சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்பு கூர்ந்து பலி செலுத்தும் போதுஅந்த இராத்திரியிலே அவன் சொப்பனத்தில் 'நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்' என்று 1 இராஜா. 3:5 ல் பார்க்கிறோம். அந்த அன்பு நிறைந்த தேவன் இன்றும்  நம் வாழ்வில் நம் காரியங்களை மிகுந்த ஆசீர்வாதமாகச் செய்வார். கடந்த ஆண்டிலே எனக்கு வேலை இல்லையே, பிள்ளையில்லையே, என் மகனுக்கு/மகளுக்கு திருமணம் ஆகவில்லையே, வீட்டைக் கட்டி முடிக்கவில்லையே, நான் விரும்பின கல்லூரியிலே என் பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லையே என்று கலங்காதீர்கள். கர்த்தரிடம் அன்பு கூறுங்கள். உங்கள் விருப்பத்தை இவ்வாண்டில் நிறைவேற்றுவார்.

கர்த்தர் இந்த புதிய ஆண்டில் நிறைவாய் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                                                    சகோ.C.எபனேசர் பால்.