பொருளாதாரத்தில் உள்ள குறைவு நீங்கி செழிப்படைய ஒரு ஜெபம்

             அன்பின் தேவனே, இந்த ஜெபநேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். ஜெபத்தைக் கேட்கிற தேவனே, என் ஜெபத்தைக் கேட்பீராக. கர்த்தாவே, நீர் அநேக காரியங்களைக் கேட்டீர், அற்புதமாய்க் காரியங்களைச் செய்தீர். இப்பொழுதும் கர்த்தாவே, எங்களுடைய எல்லைகளிலே உள்ள குறைவுகளை யெல்லாம் நீர் அறிவீர். எங்கள் குறைவையெல்லாம் நிறை வாய் மாற்றும்படி கெஞ்சுகிறோம். என் குடும்பத்தின் தேவை களைச் சந்திக்க முடியாதபடி என் கையின் பிரயாசங்கள் குறைவுள்ளதாயிருப்பதை நீர் அறிவீர் கர்த்தாவே. ஒருவிசை இரங்கும் கர்த்தாவே. எல்லாவற்றையும் மாற்றிப் போடும். நிறைந்த ஆசீர்வாதத்தையும் குறைவில்லாத வாழ்வையும் தாரும். கர்த்தாவே, எல்லாத் தேவைகளையும் சந்திக்கத்          தக்கதாக என் பொருளாதாரத்தின் நிலைகளை மாற்றிப் போடும். அதை நிறைவாக்கித் தாரும் கர்த்தாவே. எங்கள் எல்லைகளில் எப்பொழுதும் செழிப்பும், சந்தோஷமும் நிறைந்திருக்க உதவிச் செய்வீராக. நீர் ஒருவரே அதைச் செய்ய வல்லவராயிருக்கிறீர். கர்த்தாவே, பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்கு வேண்டிய பொருளாதாரக் குறைவை நீர் அறிவீர். கர்த்தாவே, நீர் ஒருவரே கையின் பிரயாசங்களை ஆசீர்வதிக்கிற தேவன். கர்த்தாவே, இந்த நாள் முதற்கொண்டு நான் செய்கிற எல்லா பிரயாசங்களையும் நீர் அங்கீகரித்து, ஆசீர்வதித்து குறைவுகளெல்லாம் நிறைவாய் மாற்றப்பட உதவி செய்யும். கானாவூர் கல்யாணத்தில் குறைவுண்டான போது, அற்புதமாய் நிறைவைப் பெருகச் செய்தவரே, என் வாழ்க்கையிலும் அவ்விதமாய் பெருகச் செய்வீராக. தயவுள்ள கரமானது எங்களைத் தாங்கி நடத்தும்படியாக கெஞ்சுகிறோம். எங்களுடைய அனுதின காரியங்கள் மாத்திரம் அல்ல எங்களுடைய ஊழியத்தின் காரியங்களில் உள்ள எல்லா விதமான தேவைகளையும் சந்தியும். நான் உமக்காய் உழைப்பதை நீர் அறிவீரே. உம்முடைய வார்த்தை களைச் சுமந்து செல்கிற கருவியாய் எங்களை மாற்றினீரே, அதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, உம்மையே நாங்கள் மேய்ப்பராய் ஏற்றிருக்கிறோம். என் பாத்திரம் நிரம்பி வழியத்தக்கதான ஒரு அனுபவத்தைத் தரும்படியாய் கெஞ்சுகிறோம். உமது வலது கரம் இதைச் செய்ததென்று நாங்கள் சாட்சியிட, உம்மைப் போற்ற, புகழ உதவிச் செய்யும். நாங்கள் கூலியாக சம்பாதித்து பொத்தலான பைகளில் போடுவதுபோல, சில காரியங்கள் நஷ்டமாக, வேதனையாக மாறினதை நீர் அறிவீர். ஆனாலும் நீர் ஒருவரே சகலவற்றையும் சீர்ப்படுத்தி, இனி மீதி வைக்கத்தக்கதாக, எங்கள் கையின் பிரயாசங்களை இன்று ஆசீர்வதியும். அதிசயம் நடைபெறட்டும், அற்புதங்களைச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன், நல்ல பிதாவே, ஆமென்.