பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம் இவைகளின் கவலை நீங்க மகிழ்ச்சிக்கான ஜெபம்

அன்பின் தேவனே, அதிகமாக என்னை நேசிக்கிறவரே, என் ஜெபத்தைக் கேட்டு என் பிள்ளைகளின் வாழ்வில் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் ஸ்தோத்திரம். இப்பொழுதும் என் பிள்ளையின் படிப்புக்காக உமது சமுகத்தில் என்னைத் தாழ்த்துகிறறேன். எனக்கு இரங்கும். நல்ல படிப்பைப் படிக்க உதவிசெய்யும். உமது சித்தம் என் மகனின் / மகளின் வாழ்வில் நிறைவேற உதவிசெய்யும். இப்பொழுது படிக்கிற படிப்பிலே மிகத்தேறின மகனாய் / மகளாய் முன்னேற உதவிசெய்யும். வீணான நண்பர்களுக்கு இடம் கொடுத்து வழி, நெறி தவறிவிடாது காரும். வீணான சண்டைக்கு இடம் கொடுத்துவிடாது நீர் தாங்கி நடத்தும். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று சொன்னவரே, தயவாய் பிள்ளைகளைக் காத்துக்கொள்ளும். அவர்களின் சமாதானம் பெரிதாயிருக்கும் என்று சொன்னவரே, எனக்கு இரங்கும். கர்த்தாவே, என் பிள்ளையின் வேலை / திருமண காரியங்களை அறிவீர். ஒரு விசை மனதிரங்கி அவர்களை ஆசீர்வதியும். கடந்த நாளில் அவர்களுக்காக ஏறெடுத்த ஜெபத்தைக்கேட்டு அதிசயம் செய்தீரே, தொடர்ந்து நடத்தும். இன்று என் ஜெபத்தை கேட்டு அவர்களின் வாழ்வை ஆசீர்வதியும். கர்த்தாவே, என் மகனுக்கு / மகளுக்கு தூரமான தேசத்தில் வேலை செய்ய விருப்பம். இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கிறவர்களின் மன வேண்டுதல்களையும் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறவரே, என் பிள்ளைகளுக்கு இரங்குவீராக. அவர்கள் விருப்பம் நிறைவேற வாசல்களை திறப்பீராக. நான் உலக மனிதர்களை நம்பி கேட்கவில்லை. உம்மையே நம்பி இருக்கிற எனக்கு இரங்கும். கர்த்தாவே, என் மகனுக்கு /  மகளுக்கு நடைபெற வேண்டிய திருமணக்காரியம் கூடியவரச்செய்யும். மனிதன் தனித்து இருப்பது நல்லதல்ல என்றவரே, ஒருவிசை  எனக்கு இரங்கி பிள்ளையின் திருமணகாரியத்தை கூடிவர செய்யும். சகல அதிகாரமும் உள்ளவரே, ஒருவிசை எனக்கு இரங்கும். நீர் எனக்கு அப்படி செய்து நான் சமாதானமும் சந்தோஷமும் அடைய உதவிச்செய்வீர் என்று துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். என் ஜெபம் கேட்டு ஆசீர்வாதமாய் பதில்தாரும். இயேசுவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.