கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

                    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துக ஒருமுறை மருத்துவ கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி viva -வுக்காக ஆயத்தமானாள். உள்ளத்தில் மிகுந்த சமாதானத்தோடு அந்த தேர்வுக்குச் சென்றாள். தேர்வுக்குப் பொறுப்பாய் இருந்த அக்கல்லுரியின் ஆசிரியர் தனக்குப் பிரியமில்லாத அந்த மாணவி வெற்றிப்   பெறக்கூடாது என்ற எண்ணத்தோடு தேர்வு நடைபெறும் நாளில் அங்கு வந்திருந்தார் . ஜெபத்தைக்கேட்கிற தேவன் அற்புதத்தைச் செய்தார் . தேர்வுக்கு வந்திருந்த external examinar தேர்வை நடத்தினார் . அந்த மாணவிக்கும் அவரே viva நடத்திவிட்டார் . அந்த மாணவிக்கு நல்ல மதிப்பெண்ணும் கொடுத்துவிட்டார். அவளைப் பிடிக்காத கல்லுரி ஆசிரியர் mark list -டைப்  பார்த்தவுடன் மிகுந்த கோபம் உண்டானது . வெளியிலிருந்து வந்த examinar -ரிடம் அதைக்குறித்துப் பேசியபொழுது நான் நேரடியாக அந்த மாணவியைச் சோதித்து அறிந்தேன் , அவளுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மாற்ற இயலாது என்று சொல்லிவிட்டார். ஏற்கெனவே இவ்விதமான தேர்வில் தோல்வியைச் சந்தித்திருந்த அந்த மாணவிக்கு இத்தேர்வின் முடிவு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. கர்த்தரைத் துதித்தாள்.

                    இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதிரியே , உன் வாழ்க்கையின் போராட்டமான சூழ்நிலைகளினால் பயப்படாதே, உனக்கு விரோதமாயுள்ள மக்களைக் குறித்து கலங்காதே. ' கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் ' என்ற வாக்கின்படியே உங்களுக்காக யுத்தம் செய்து வெற்றியும் மேன்மையும் அருளுவார். பயமும் பெலவீனமும் ஒருபோதும் உன்னை மேற்கொள்ள இடங்கொடாதே , சகலவற்றையும் நன்மையாய் முடியச் செய்கிற தேவன். பகைவர் மத்தியில் உன் தலையை உயர்த்துவார். சோர்ந்து போகாமல் கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு. கர்த்தர் அதிசயம் செய்வார்.

                       கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.                                                                                                                                                                        சகோ.சி . எபனேசர் பால்