"அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்."

                                                                                                         புலம்பல் 3:32

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒருமுறை என்னுடன் பணியாற்றிய ஆசிரியரின் மகன் என்னிடத்தில் ஜெபிக்க வந்தான். அவன் இன்ஜினியரிங் கல்லூரியில் தன் படிப்பைப் படித்தான். ஆனால் அவன் படிப்பு ஆண்டுகளை முடித்தபோது அநேக பாடங்களில் தோல்வி அடைந்திருந்தான். கல்லூரியை விட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.பாடங்களிலும் சில மாறுதல் ஏற்பட்டு விட்டது.நீ கர்த்தரைத் தேடு. அவர் உன் சஞ்சலங்கள் நீங்க உனக்கு இரக்கம் செய்வார்  என்று ஆலோசனை கூறினேன். அத்துடன் உன் தேர்வுகளை எழுது  என்றும் கூறினேன்.முதலில் இது முடியுமா? என்ற கேள்வியுடன் இருந்த அவன் கல்லூரி  சென்று விசாரித்தான். தேர்வு கட்டணம் கட்ட சென்ற இடத்தில் நீ நன்றாக Donation தருகிறாய் என்று கூறி பரிகசித்தார்கள் . கர்த்தர் அவனுக்கு இரங்கின படியால், அவனது அரியர்ஸ் பாடங்களை எல்லாம் இரண்டு முறை Exam. எழுதிய தேர்வில் வெற்றி பெற்று முடித்து விட்டான். இன்று வெளி நாட்டில் பணி  செய்கிறவனானான்.

அருமையான தேவப்பிள்ளையே, உன் வாழ்வில் இன்று தோல்வியில் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? கர்த்தரைத்  தேடி அவர் சமுகத்தை நாடுங்கள். உங்கள் காரியங்களை ஜெயமாக்கும் தேவன் அவர். ஜெபங்களைக் கேட்பார். உங்களுக்கு இரங்கி வெற்றியைத் தருவார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ.C. எபனேசர் பால்.