"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு:

                            அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்."

                                                                                                 சங்கீதம் 37:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

 ஒருமுறை இந்தியாவில் ஒரு பட்டணத்தில் ஊழியம் செய்யும்போது, ஊழியம் செய்கிற ஒரு சகோதரர் எனக்கு ஒரு வீடு சென்னையில் இருக்கிறது. என் வீட்டை ஊழியம் நடைபெறுவதற்காகக் கொடுத்தேன். சபை நடத்தி வந்த ஊழியக்காரர் திடீரென கொடுக்க வேண்டிய குறைவான வாடகைப் பணத்தையும் கொடுக்காது நிறுத்திவிட்டார். எப்படி அவரிடம் கண்டிப்பாக வாடகை கேட்பது என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்த வீடு ஒன்று தான் எனக்குரிய சொத்தாக இருக்கிறது என்று கூறினார். அத்துடன் இந்த வீட்டை நம் சபைக்கென்று கொடுத்துவிட்டார் என்று அந்த சபையார் ஸ்தோத்திரக் கூட்டத்தையும் நடத்தினார்கள் என்றார். அதற்கு ஆலோசனையாக கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருங்கள். உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றுவார். சோர்ந்து போகாதிருங்கள் என்று ஆலோசனைகளைக்  கூறி அவர்களைத் தேற்றினேன், அத்துடன் நீங்கள் மனமகிழ்ச்சியாய் இருக்கும்போது, அந்தச் சபையை நடத்துகிறவர்கள் உங்கள் வீட்டின் கதவை பூட்டி சாவியைக் கொண்டு  வந்து கொடுப்பார்கள். பயப்படாதீர்கள் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. கர்த்தர் அவர் சொன்னபடியே அந்த சபையை நடத்தின ஊழியக்காரர் அந்த வீட்டின் சாவியை ஒரு நாளிலே கொண்டுவந்து கொடுத்தார். நடைபெற்ற நிகழ்ச்சியின் நிமித்தமாய் அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

அருமையான சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை , போராட்டங்களை எண்ணி கலங்காது, கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொன்ன வார்த்தையின்படி நாம் செய்யும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரச்னைகளைத் தீர்த்து, சமாதானத்தையும் சந்தோஷத்தையும், உண்டாக்குவார்.

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ.C.எபனேசர்