"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்...'

                                                                                                                                         சங்கீதம்121:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் முன்பு, என் தகப்பனார் வீட்டிலே தங்கியிருந்தோம். நானும் என் மனைவியும் அங்கிருந்து எங்களின் வேலைக்குச் சென்று வருவோம். சில சமயம் நான் வைத்திருந்த சைக்கிளிலே ஏற்றி அவள் பணி செய்கிற பள்ளிக்கூட வாசலில் இறக்கி விடுவேன். பின்பு நான் வேலை செய்த பள்ளிக்குச் செல்லுவேன். மாலையிலே என் பள்ளிக்கூடத்திலிருந்து நேரடியாக வீடு திரும்பி விடுவேன். ஒரு நாளிலே நான் வீடு திரும்பின போது ஒரு சந்திலிருந்து பிரதான சாலையிலே சேரும் சமயத்தில், பிரதான சாலையில் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது.அதன் முன்னிருந்த Electric post ல் மோதியது. உடனே மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருந்த மின் கம்பி அறுந்து என் சைக்கிளின் முன் சக்கர டையர் மீது விழுந்து தரையிலே நெருப்பாக எரிந்து அணைந்து விட்டது. அன்று அந்த மின்சாரம் பாய்ந்த மின்கம்பி என்னுடைய சைக்கிளின் handbar ல் அல்லது mudguard ல் விழுந்திருந்தால் நான் கருகிப்போயிருப்பேன். அன்று கர்த்தருடைய கிருபையினாலே நான் நிர்மூலமாகாதபடி காக்கப்பட்டேன்.

அன்பு சகோதரனே, சகோதரியே நம்மை நேசிக்கிற இயேசு கிறிஸ்து தம்முடைய அளவற்ற கிருபையினாலே அனுதினமும் நம்மைக் கண்ணின் மணிப்போல் காத்து நடத்துகிறவராய் இருக்கின்றார். அவரைப் பற்றிக் கொள்ளும்போது என்றும் நமக்குள் சுகவாழ்வை மலரச் செய்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                              சகோ.C. எபனேசர் பால்.