"கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, 

                                                          அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.'

                                                                                                                                                                                                 சங்கீதம் 12:7

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

 

நான் திருச்சியில் இருக்கும்போது அமெரிக்கா நாட்டிலிருந்து இயேசு கிறிஸ்துவை அறியாத ஒருவர் தொலைபேசி மூலமாய் என்னுடன் தொடர்பு கொண்டார். அவர் அழுதுகொண்டே என் மகள் 12 வயது நிறைந்தவள். இப்பொழுது ஆஸ்பத்திரியில் intensive care unitல் இருக்கிறாள். 30 செகண்ட்டுக்கு ஒரு முறை பிட்ஸ் வருகிறது. மருத்துவர்கள் சிகிச்சைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் பிட்ஸ் வருவது குறையவில்லை என்றார். அந்த சகோதரரிடம் இயேசு கிறிஸ்துவை நம்புகிறீர்களா என்றேன். ஆம் என்று கூறினார். உடனே அவர்கள் மகளுக்கு ஒரு ஜெபம் செய்தேன். ஜெபத்தைக் கேட்கிற இயேசு கிறிஸ்து அவர்களுக்கு இரங்கி 30 செகண்ட்டுக்கு ஒரு முறை வந்த அந்த பிட்ஸ் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாக வர ஆரம்பித்தது. மருத்துவர்கள் இவள் பிழைத்தாலும் ஞாபகசக்தி இல்லாதபடி குறைவோடு உள்ள மகளாக இருப்பாள் என்று சொல்லி விட்டார்கள். அந்தப் பிள்ளையின் தாயிடம் உங்கள் மகள் கழுத்தில் உள்ள கயிரின் அடிப்பகுதியில் ஒரு டாலர் இருக்கிறது. இந்தப் படம் உள்ள அந்த டாலரை எடுத்து விடுங்கள் என்று கூறினேன். இதைச் சொன்னவுடனே அவர்களின் விசுவாசம் வளர ஆரம்பித்தது. இயேசு கிறிஸ்து அவர்களை நேசித்து வெளிப்படுத்தின கழுத்தில் மாட்டியிருந்த டாலரை உடனே எடுத்து விட்டார்கள். இரண்டு நாள் கழித்து தான் அந்த மகளுக்கு பிட்ஸ் வந்தது. அந்தச் சகோதரியிடம் நீங்கள் ஒரு பட த்திற்கு முன்பாக நின்று அழுது கொண்டிருக்கிறீர்கள், அவைகள் ஒன்றுக்கும் உதவாது. அவைகளை எடுத்துவிடுங்கள் என்று சொன்னேன். பிட்ஸ் நோய் நீங்கின மகள் தாய் தகப்பனாரை அடையாளம் கண்டு கொள்ள முடியாதவளாய் இருந்தாள். அந்தப்பெற்றோருக்கு மிகுந்த துக்கம். அதினிமித்தமாய் ஜெபிக்கக் கேட்டார்கள். அந்தமகளுக்காய் ஜெபித்தபோது, அன்றே அந்த மகளின் ஞாபகசக்தி திரும்ப வந்தது. பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியினால் நிறைந்தார்கள். மேலும் அவள் படிக்கின்ற வகுப்பில் தேர்வில் இரண்டாவது வந்தது பெற்றோரை ஆச்சரியப்படுத்தியது. இன்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறவர். மாறாதவர். அவரை நாடித்தேடுகிறவர்களை ஆசீர்வதிக்கிறார்.

 

அன்பு தேவப்பிள்ளையே, இன்றைக்கு வாழ்க்கையில் இனி ஒன்றும் செய்ய இயலாது, மருத்துவராலும், எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவப்பிள்ளையே, ஊக்கமாய் ஜெபிக்கும்போது, உன்னிலும், உன் குடும்பத்திலும் கர்த்தர் அதிசயங்களைச் செய்து ஆசீர்வதிப்பார்.

 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                       சகோ. C. எபனேசர் பால்.