"நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;

                                                                                                   நீரே என் தேவன் என்று சொன்னேன்.”

                                                                                                                                                                                       சங்கீதம் 81:14

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

 

தாவீது ஆடு மேய்க்கின்ற நிலையில் இருந்து ஒரு உன்னதமான ராஜாவாக உயர்த்தப்பட்டார். அவரது வாழ்க்கையில் இந்த ஆசீர்வாதமான உயர்வுக்குக் காரணம் தாவீது கர்த்தரை நம்பினதாகும். தாவீது கர்த்தரைத் தன் தேவனாக வாழ்க்கையில் கொண்டு நடந்ததால் மிக அதிகமாக, அதிசயமான, பாதுகாவல், சமாதானம், உயர்வைப் பெற்றார். அவர் சந்ததியும் அவ்வாறே ஆசீர்வதிக்கப்பட்டது. ஆகவே தான் 'கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்' என்று நீதி. 16:20, எரேமியா 17:7, சங்கீதம் 84:12ல் பார்க்கிறோம். அப்படியானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும் போது நமக்கு என்னென்ன ஆசீர்வாதம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

 

கர்த்தரை நம்பும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

1. விரோதமாய்  எழும்புகிறவர்களின்று இரட்சிக்கிறார்

"உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய்  எழும்புகிறவர்களின்று  உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே...”சங்கீதம் 17:7

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம்பும்போது அவர் நமக்கு விரோதமாக செயல்படுகிற சகல சத்துருக்களின் கைக்கும் நம்மை தப்புவிக்கிறார். அன்றாடக வாழ்க்கையில் ஒவ்வொரு வருக்கும் காரணமில்லாத சத்துருக்கள் தோன்றி விடுகிறார்கள். சிலருக்கு அண்டை வீட்டாராக இருக்கும், சிலருக்கு உடன் வேலை ஆட்களாய் இருக்கும். சிலருக்கு சில கட்சிகளோ, சில அண்டை கடைக்காரரோ எதிராக வரலாம். இவர்கள் நமது கண்களுக்குத் தெரிகின்ற சத்துருக்கள். நமது கண்களுக்குத் தெரியாத சத்துருக்களும் உண்டு. இவைகள் நமது வாழ்வில் நமது சந்தோஷத்தைக் கெடுத்து நமது வாழ்வில் நாம் பெற வேண்டிய ஆசீர்வாதத்தை, நன்மைகளைச் சிதறடித்து விடுகிறது. ஆகவே இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற இயேசு கிறிஸ்துவை நம்ப வேண்டும். சிலருக்கு இந்தப் போரட்டம் சரீரத்தில் (வியாதி) இருக்கலாம். சிலருக்கு ஆவியில் (கவலை, மனச்சோர்வு) இருக்கலாம். நமக்கு எதுவாக இருந்தாலும் நாம் கலங்காது நம்மைத் தப்புவித்து விடுவிக்க வல்லவர் மீது நம் பாரங்களை வைக்கும் போது, அவர் நம்மை ஆதரித்து விடுவிக்கிறார். இந்த விடுதலையை இயேசு கிறிஸ்து நமக்காய் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் ஏற்படுத்தினார். அன்பின் சகோதரனே, உன் சத்துரு கடனாக இருந்தாலும் சரி, வியாதியாக இருந்தாலும் சரி, இந்த சத்துருக்களைக் குறித்து நாம் இனி கலங்க வேண்டாம். நமது நம்பிக்கையை சர்வ வல்லமை உடையவராகிய கர்த்தர் மீது வைக்கும் போது, இந்த ஜீவனுள்ள தேவன் நம்மை சகல வேதனையில் தேவன், இருந்தும் தப்புவித்து, இரட்சிக்க போதுமானவராய் இருக்கிறார். வானத்தின் கீழ் சர்வ அதிகாரம் உடைய, வல்லமையுடைய இயற்கை, வியாதி, தீயசக்தி, பாவம் இவற்றின் மூலம் வரும் சகல துன்பங்களில் இருந்தும் நம்மை தப்புவித்து காக்கின்றார். ஆகவே நாம் தப்புவிக்கப்பட்டு இரட்சிக்கப்பட இன்று முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்போம்.

2. உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவார்கள்

"...கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்."  நீதிமொழிகள் 29:25

 கர்த்தரை நம்பி தப்புவிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டு நாம் அனுதினமும் இந்த இரட்சிப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரட்சிப்பின் பாதுகாவல் கர்த்தரை நாம் நம்பும்போது நமக்குத் தரப்படும் என்று பார்க்கிறோம். மனிதன் தனக்குப் பாதுகாவலை தனது செல்வம், ஞானம், பெலன், ஜாதி இவற்றின் மூலமாக தேடுகிறான். இது தகர்க்கப்படக்கூடியது, நம்பிக்கையற்றது. காலஞ்சென்ற நமது பிரதர் இந்திரா காந்தி அம்மையார் சிலரை தனது மெய்க்காப்பாளராக அமைத்திருந்தார்கள். அப்படியிருந்தும் என்ன நடந்ததென்று நாம் அறிவோம். அந்த மெய்க்காவலரில் ஒருவரே அவரது உயிரை மாய்த்துப் போட்டார். மனிதன் மூலமாக ஏற்படுகிற பாதுகாவல் இப்படிப்பட்டது. அநேகர் அழிந்து போகிற பொருட்களின் மீதும், செல்வத்தின் மீதும், நிலையற்ற மனிதர் மீதும் தங்கள் பாதுகாவலுக்கான நம்பிக்கையை வைத்து தங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கெடுத்தும் போடுகிறார்கள். ஆனால் நமது நம்பிக்கையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது வைக்கும் போது நமக்கு அவர் உன்னத பாதுகாவலைத் தருகிறார்.

ஒருமுறை சில வாலிபர்கள் குற்றாலத்தின் மலைமீதுள்ள நீர் வீழ்ச்சி அருகில் தங்கி இயேசு கிறிஸ்துவைப் பற்றி தியானித்தார்கள். அச்சமயத்தில் கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையின் நம்பிக்கையாக கொண்ட ஒரு வாலிபன் அவர்களது சாப்பாட்டுக் காரியங்களைப் பொறுப்பேற்று முடித்து, நீர்வீழ்ச்சியில் சென்று கழுவி வரச் சென்றான். அவ்வாறு சென்ற அவன் வழுக்கி கீழே விழுந்தான். பல நூறு அடிகளுக்குக் கீழாக விழுந்த அவன் எவரும் தப்பிப் பிழைக்க முடியாத பொங்குமா கடலில் விழுந்து விட்டான். இவன் மரித்திருப்பான் என்று தேடினார்கள். ஆனால் கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்ட இவனைக் கர்த்தரின் கரம் பாதுகாத்து, ஒரு பாறையின் மீது அமரச் செய்தது. தீ அணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர். சில மணி நேரத்திற்குப் பின்பு அவனை அந்த இடத்திலிருந்து இக்கரைப்படுத்தினார்கள். இதைப் போல கர்த்தரை தன் நம்பிக்கையாக வைத்த தெய்வ மனிதர்களுடைய சாட்சியைப் பல்லாயிரக் கணக்கில் காணலாம். உன் வாழ்க்கையிலும் இதைவிட மேலான பாதுகாவலைத் தர உனக்காக ஆணிகளால் கடாவப்பட்ட அன்பின் கரம் நீட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நீ ஏற்றுக்கொண்டு வாழ்வாயானால் உயர்ந்த கன்மலையின்மேல் தன் கூட்டைக் கட்டின கழுகைப் போல் உன் குடும்பமும் உயர்வாய் பாதுகாக்கப்படுவது நிச்சயமல்லவா ?

3. காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

 "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” சங்கீதம் 37:5

இன்று மனிதன் தனது வாழ்வில் காரியங்களைப் பணத்தின் மூலமாகவும், தன் சுய ஞானத்தின் மூலமாகவும் பக்க பலத்தின் மூலமாகவும் சாதித்து விடலாம் என்று முயற்சித்து, தோல்வி அடைந்து வாழ்க்கையில் நம்பிக்கை அற்றவனாய் காணப்படுகிறான். வேறு நபரை அல்லது காலத்தைக் குறை கூறி வருந்துகிறான். கர்த்தரை நாம் முழுமையாக இயேசு நம்புகிறவர்களுக்கோ தோல்வி கிடையாது. கிறிஸ்துவிடம் சரண் அடைந்து, அவர் மீது நம்பிக்கை வைக்கும் சமயம் நமது ஒவ்வொரு முயற்சியும் நுாறு மடங்கு நன்மையை நமக்குத் தரும். ஈசாக்கு என்ற தேவ மனிதர் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து விதை விதைத்தார். அது நுறு மடங்கு விளைந்தது என்று வேதத்தில் பார்க்கிறோம். நமது நம்பிக்கை கர்த்தரை விட்டுக் குறைய, குறைய நமது வெற்றியும், வருவாயும் நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. அநேக விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விதைகளைப் பயிர் செய்து, பூச்சி, புழுக்களிலிருந்து பாதுகாக்கப்பட பலபூச்சி மருந்துகளை அடித்து பலவிதமான தழைச்சத்துகளையும், உப்புச் சத்துக்களையும் கொடுத்தாலும் மகசூல் குறைந்து காணப்படுவது ஏன் ? இதை வாசிக்கிற அருமையான அன்பின் தேவப் பிள்ளையே, நம் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு தெய்வம் நமது காரியங்களை வாய்க்கச் செய்ய கட்டளையிடாவிட்டால், நமது காரியம் ஒரு போதும் வெற்றி பெற இயலாது.

ஒருமுறை எனக்கு அறிமுகமான கட்டடங்களைக் கட்டும் சகோதரர், தான் வேலை செய்கிற இடத்திற்கு வரும்படி அழைத்தார். அவர் கட்டிய கட்டடங்கள் அனைத்தும் கடற்படையின் (Southern Na- val command) பொறுப்பாய் இருந்தது. அந்நாட்களில் இலங்கை தேசத்தினுடைய போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபடியால் இலங்கை தீவிர இயக்கங்களுக்கு எந்த உதவியும் வங்காளவிரிகுடா அல்லது இந்துமகாசமுத்திரம் வழியாக சென்று விடாதபடி தடுப்பதற்காக கண்காணிக்கப்பட இக்கட்டடம் கட்டப்பட்டது. இதில் கடலிலோ, சமுத்திரத்திலோ செல்லக்கூடிய படகையும், எல்லாவற்றையும் அரை வட்ட வடிவத்தில் அமைந்த ஸ்கிரீனில் காணக் கூடியதாய் அமைந்திருந்தது. Southern Command கட்டடத்தை திறப்பதற்கு மூன்று நாளே இருந்தது. இதைப் பொறுத்தி இயக்குவதற்கும் வந்த பொறியாளர் மிகுந்த கவனத்தோடு அவைகளுக்குரிய பெரிய கம்பங்களை நட்டு அதனை செயல்படுத்த மிகுதியாய் முயற்சித்தார்கள். அது முடிவடையாத படியால் மிகவும் சோர்ந்து போய் விட்டார்கள். எனக்கு அறிமுகமான ஒருவரை அழைக்கிறேன், அவர் ஜெபித்தால் சரியாகிவிடும் என்று என்னை அழைத்தவர் சம்பந்தப்பட்ட அதிகாரியோடு கூறினார். பிரயாசப்பட்ட மூவரில் இருவர் புறமதஸ்தர், ஒருவர் கத்தோலிக்க கிறிஸ்தவர். காரியம் நடைபெறாதபடியால் நான் அங்கு சென்று ஜெபிக்க ஒப்புதல் என்று தெரியாத கொடுத்தார்கள். எப்படி சரி செய்வது போராட்டமான நேரத்திலே உள்ளே சென்று ஜெபித்தேன். நான் நீங்களும் கர்த்தரை நம்புங்கள் என்று கூறிவிட்டு அவ்வளவு பெரிய ஸ்கிரீன் நலமாய் செயல்பட ஜெபித்தேன். ஜெபத்தைக் கேட்கிற தேவன் ஜெபத்தைக் கேட்டார். என்னை அழைத்த சகோதரர் கர்த்தர்மேல் வைத்த நம்பிக்கை வீண்போகாதபடி சுவிச் போட்டவுடன் எல்லா உபகரணங்களும், ஸ்கிரீனும் நலமாக செயல்பட ஆரம்பித்தது. அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். அவர்களுடைய நெருக்கங்கள் நீங்கி காரியங்கள் வாய்க்க கர்த்தர் தயை செய்தார்.

உன்னுடைய காரியம் முழுமையாக வெற்றி பெற தானியேல் என்ற தேவ மனிதன் போல் உனது நம்பிக்கையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீது வைக்கும் போது உன் காரியம் வெற்றியாக, பூரணமாக வாய்க்கும். உன் வீடு கட்டுகிற முயற்சியில் வெற்றி வாழ்க்கையில் வெற்றி இல்லையா ? ஒரு இல்லையா? உன் திருமண நல்ல வேலை அமைவதில் தோல்வியா ? உன் சரீர வியாதியிலிருந்து விடுபட முடியாத அளவு உன் முயற்சி தோல்வி அடைந்துள்ளதா உன் கடன் தொல்லைகளைக் குறைப்பதில் தோல்வியா ? எந்தக் காரியமானாலும் சரி, அதில் பூரண வெற்றி பெற இன்றே நம்பிக்கையைக் கர்த்தர் மீது வைப்பாயானால், உனது காரியங்களை வாய்க்கச் செய்வார். உன் செல்வம், பெலன், ஞானம் இவற்றின்மீது நம்பிக்கை வையாது, கர்த்தர் மீது நம்பிக்கையை வை. அவரே காரியத்தை வாய்க்கச் செய்வார்.

4. பூரண சமாதானம் தருவார்

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ஏசாயா 26:3

கர்த்தரை நாம் நம்பும்போது நமக்குச் சமாதானமும் சந்தோஷமும் நிறைவாய் கிடைக்கும். இன்று மனிதன் சமாதானத்தை நாடி பலவிதமான காரியத்தைக் கையாளுகிறான். தனது வாழ்வில் தன் மனைவி துரோகம் செய்து விட்டாள் என்று மதுவை அருந்தி, மேலும் தன் சரீரத்தைக் கெடுத்து சமாதானம் இழந்த நபர்களைப் பார்க்கிறோம். சிலர் தாங்கள் நேசித்த அருமையான பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அவர்கள் நிலைமாறும் போது சமாதானம் இழந்து தவிப்பதைப் பார்க்கிறோம். நம்பிக்கை அற்ற இந்த உலக வாழ்வில் சமாதானம் பெற ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் சமாதானத்தைப் பிசாசானவன் தனது தந்திரத்தால் கெடுத்துப் போட்டான். இவனது நம்பிக்கைத் துரோகச் செயலினால் மனிதனுக்குச் சாபம் ஏற்பட்டது. 'பழத்தை புசிப்பாயானால் நீ சாகாமல் இருப்பாய், நன்மை தீமை அறியத்தக்க ஞானம் கிடைக்கும்' என்று கூறி நம்பிக்கைத் துரோகம் செய்த இந்த சாத்தானின் வலையில் இருந்து தப்பி 'உன்னை மீட்டுக்கொண்டேன். உனக்குச் சகாயம் செய்வேன். கலங்காதே, திகையாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்' என்று கூறும் ஜீவ தேவனின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து, 'அவர் என்னை ஆதரிப்பார்; தப்புவிப்பார்; பாதுகாப்பார்' என்று உன் நம்பிக்கையை அவர் மீது வைப்பாய் என்றால் உன் சமாதானம் நதியைப்போல உன்னைத் தொடர்ந்து வருவதைக் காண்பாய். இதோ, சமாதானத்தை வைத்துப் போகிறேன் என்று சொன்ன, அவ்வாறே செய்து முடித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்தவின் மீது உன் நம்பிக்கையை வைப்பாய் என்றால் சமாதானம் உன் வாழ்வில் நிரந்தரமாய், பூரணமாய் காக்கப்படும்.

5. கிருபை சூழ்ந்து கொள்ளும்

கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்." சங்கீதம் 32:10

கிருபை என்பது தகுதியற்ற நமக்கு தேவனின் இரக்கம், தயவு, அன்பு காட்டப்படுவதாகும். இந்தக் கிருபையினால் தான் நாம் சத்துருக்களினால் அழிக்கப்படாது காக்கப்பட்டு வருகிறோம். நாம் நிர்மூலமாகாதிருப்பது அவரது சுத்த கிருபை' என்ற வேத வசனத்தை மறந்து போகக்கூடாது. அநேகருக்கு இல்லாத சுகம், பெலன், உத்தியோகம், வீடு, சமாதானமான சூழ்நிலை ஆகியவை உனக்குக் கொடுக்கப்பட்டிருப்பது அவரது கிருபையால் தான். நாம் அவற்றிக்குத் தகுதியா என்று இந்த வேளையில் சற்று சிந்திப்போம், என் வேலையில் உத்தமமாய் உண்மையாய் காணப்படவில்லை. ஆனால் தண்டிக்கப்படாமல் இருக்கிறேன் என்று உன் மனதில் தோன்றுமானால், தகுதியற்ற உனக்குக் காத்தர் கிருபை பாராட்டுகிறார். நீ சீர்ப்படுத்தப்பட்டு உத்தமமாய் வாழ வேண்டுமென்று கர்த்தர் மீது இரங்கி, கிருபையின் காலத்தைக் உன் கொடுத்திருக்கிறார். இன்று உன் நம்பிக்கையைக் கர்த்தர் மீது வைத்து உண்மையாய் வாழ்ந்து என்றென்றைக்கும் கிருபையைப் பெற்று வாழ்வாயாக. இந்தக் கிருபையானது பெருகவும், உன்னைச் சதா சூழ்ந்திருக்கவும் வேண்டுமென்றால், உன் நம்பிக்கை கர்த்தர் மீது மட்டுமே வைக்கப்பட வேண்டும். அனுதின வாழ்வில் நாம் வீட்டை விட்டு வெளிச் சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் முன் எத்தனை விதமான விபத்துக்களைக் கடந்து செல்லுகிறோம். எத்தனை விதமான வியாதிகளைச் சந்திக்கிறோம். எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத தீய ஆவிகள் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இவைகளினின்று நாம் காக்கப்படுவது கர்த்தருடைய கிருபை அல்லவா? இந்தக் கிருபை இன்னும் பெருகவும், உன்னைச் சூழவும் இருக்க வேண்டுமானால், கர்த்தர் மீது உன் நம்பிக்கையை வை.

6.எல்லாக் காரியங்களிலும் செழிப்பைக் கொடுப்பார்

...கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்." நீதிமொழிகள் 28:25

இன்றைய நலிந்த வாழ்விலிருந்து மீட்கப்பட்டு சகலவிதத்திலும் செழிப்படைய வேண்டுமானால், கர்த்தர் மீது நம் நம்பிக்கையை வைக்க வேண்டும். சரீரம் பெலன் அடைய வேண்டுமென்று ஆகாரத்தின் மீது சிலர் நம்பிக்கை வைக்கிறார்கள். சிலர் அழிந்து போகிற பொருட்களின் மீது நம்பிக்கை வைத்து சந்தோஷம், சமாதானத்தில் செழிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் பொருளும், செல்வமும் மறைந்து விடுகிறது. என்றென்றைக்கும் ஜீவிக்கிற கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கும் போது செல்வத்திலும், பாதுகாப்பிலும், போஷிக்கப்படுவதிலும், சமாதானத்திலும், சந்தோஷத்திலும், சரீர சுகத்திலும், பிள்ளைகளில் நடைபெற வேண்டிய நன்மையான காரியங்களிலும் நாம் செழிப்படைந்து, ஆசீர்வதிக்கப்படுவோம். ஈசாக்கு கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தபோது, ஐசுவரியவானாகி, விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என்று எழுதப்பட்டுள்ளபடி, நாமும் செழிப்படைய நமது நம்பிக்கையைக் கர்த்தர் மீது வைப்போம்.

எந்த மனிதன் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து நீதிமானாக மாற்றப்படுகிறானோ அவனது வாழ்க்கை செழித்து சிறப்பாய் மாறி விடும். சங். 92:12 'நீதிமான் பனையைப்போல் செழித்து, னோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். ' எனப் பார்க்கிறோம். மீதும் அவர் வார்த்தையின் மீதும், அவருடைய வல்லமையின் மீதும். நம்பிக்கை பெருகும்போது, செழிப்பும் சிறப்பும் அடைவோம். கடன் வாங்கும் வழக்கம், பழக்கம் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நிறைந்தும் எளிதாக பெறக்கூடியதாயும் இருக்கிறது. ‘நீயோ கடன் 'வாங்குவதில்லை' என்ற வார்த்தையை அசட்டை செய்து, உலக மக்களைப்போல நமது நம்பிக்கை மாறுவதினால் கடன் வாங்கி நம் சம்பாத்தியத்தை விரயமாக்குகிறோம்.

நான் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும் முன்பாக ஒவ்வொரு நாளும் கடன் வாங்குகிற பழக்கம் உடையவனாய் இருந்தேன். என்னோடு வேலை செய்த ஆசிரியர்களிடம் கடன் வாங்கியிருந்தேன். என்னுடைய 3 பி.எப்.லிலும் லோன் வாங்கியிருந்தேன். நான், என்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரது வார்த்தையின்படி வாழ இடம் கொடுத்தேனோ அன்றிலிருந்து கடன் வாங்கும் பழக்கத்தையும் வழக்கத்தையும் விட்டு விட்டேன். கடன் தொகையை எப்படிக் கொடுத்துத் தீர்ப்பது என்று எண்ணி ஜெபிக்க ஆரம்பித்தேன். கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான் என்ற வார்த்தையின்படி அவருடைய வல்லமையின் கிரியைகள் நடைபெற ஆரம்பித்தது. கொஞ்சம் சம்பளம் வாங்கினாலும் மீதி வைக்கக்கூடியதாய் மாறியது. 5 அப்பத்தையும் 2 மீனையும் ஆசீர்வதித்து மீதி எடுத்ததுபோல எனது கொஞ்சம் சம்பளமே போதுமானதாயும் வட்டி கொடுப்பதற்கும், கடன் தொகையைக் கட்டுவதற்கும் போதுமானதாக மாறியது. முதல் 6 மாதத்திலேயே சில இன்ஸ்டால்மன்ட்டாக கொடுக்க வேண்டிய கடன் முடிந்தது. பிறகு எளிதாக கடன் தொகைகள் முடியவும், என் வரும்முன்பாக வேலையை ராஜினாமா செய்து முழுநேர ஊழியராய் யாரிடமும் காணிக்கை வாங்காதிருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கர்த்தர் நிறைவேற்றவும், என் மாத சம்பளத்தை முழுமையாய்ப் பெறுவதற்கும் கர்த்தர் உதவி செய்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது ஜீவ வசனங்களையும் நம்பும்போது செழிப்பும் சிறப்பும் அடைவோம்.

7. தேசத்தைச் சுதந்தரித்து ஆளுகை செய்வான்

"...என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான்." ஏசாயா 57:13

இந்த உலகத்திலே அநேக விதமாக ராஜ்யங்கள் எழும்பி பின்பு விழுந்து அழிந்துபோயின. இதைப்போல இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்கள் எழும்பி விழுந்தனர். இவைகளெல்லாம் அநித்தியமான வைகள். ஒருமுறை ஒருவர் தான் எலெக்ஷனில் நிற்கப் போகிறேன், என் கட்சியில் நான் நிற்பதற்கு எனக்கு உதவி செய்வார்களா என்று தன் கிறிஸ்தவ நண்பரோடு ஜெபிக்க வந்தார். அவரிடம் கர்த்தரை நம்புங்கள், உங்கள் கட்சியாளர்கள் உதவி செய்து, வெற்றி பெற்று மந்திரியாவீர்கள் என்று கர்த்தரின் வார்த்தையைக் கூறினேன். கர்த்தரின் வார்த்தைப்படி எலெக்ஷனில் நின்று, வெற்றியும் பெற்று, மந்திரியாகவும் ஆனார். அவருக்கு மிகுந்த சந்தோஷம்.ஆளுகைக்கு வாய்ப்பு தனக்கு வந்ததே என்று மகிழ்ந்தார். ஆனால் அந்த அரசாங்கமோ குறுகிய காலத்தில் விழுந்து விட்டது. அவர் பெற்ற ஆளுகையின் காலம் குறுகியது. கர்த்தருடைய ஆளுகை காலமோ நிலையானது.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து முற்றுகைபோட்டான். அந்தச் சமயத்திலே நலமான வாலிபர்களைச் சிறைப்பிடித்து கொண்டு வந்தான். அவ்வாறு வந்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, தானியேல் - 4 பேரும் கர்த்தரை நம்பி தங்களைத் தீட்டுப்படுத்தாதபடி காத்துக் கொண்டார்கள். இவர்களுக்குத் தேவன் கொடுத்த ஞானத்தினாலும் அறிவினாலும் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொண்டார்கள். அடிமைகளாய் வந்த இவர்கள் அந்தத் தேசத்திலே நல்ல பதவிகளை வகிக்க கர்த்தர் உதவி செய்தார். திடீரென நேபுகாத்நேச்சார் ஒரு பொற்சிலையை நிறுத்தி, அதற்குமுன் பணிய வேண்டும் என்று கட்டளையிட்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ கர்த்தரை ஆராதிக்கிறவர்களாக இருந்தபடியால் சிலையை வணங்கவும் இல்லை, பணியவும் இல்லை. இதனைப் பார்த்த அத்தேசத்தார் ராஜாவிடம் தெரிவித்தார்கள். ராஜா கோபமடைந்து கீதவாத்தியங் களின் சத்தத்தைக் கேட்கும்போது, பொற்சிலையைப் பணிய வேண்டும். இல்லையெனில் அக்கினிச்சூளையில் போடப்படுவீர்கள் என்று கூறினபோது, நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். நீர் நிறுத்தின பொற்சிலையை வணங்க மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். இதனால் ஏழுமடங்கு சூளையை அதிகரிக்கச் செய்து, மூன்று வாலிபர்களும் கட்டப்பட்டவர்களாய் அக்கினிச்சூளையிலே போடப்பட்டார்கள். கொண்டு சென்றவர்கள் அக்கினியின் அகோரத்தால் இறந்து போனர்கள். ராஜாவிற்குச் சந்தேகம் ஏற்பட்டது. 3 பேரைத் தானே போட்டோம். 4 பேர் உலாவுகிறார்களே என்று அவர்களை வெளியே அழைத்தார். நாலாம் ஆளின் சாயல் தேவப்புத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றார். அவர்கள் மீது அக்கினி எந்தவித சேதமும் உண்டாக்காதபடியால் ராஜா 'சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது துாதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். (தானி. 3:28) என்றான் பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறவன் கர்த்தருடைய ராஜ்ஜியத்தை சுதந்தரித்து அதை ஆளுகை செய்வான். அந்தத் தேசம் மிகுந்த சந்தோஷம், சமாதானம் நிறைந்த இடம். அந்தப் பரிசுத்தமான தேசத்தில் அழுகையும், கண்ணீரும், துயரமும், வியாகுலங்களும், பொறாமையும், வஞ்சகமும் இல்லை. அன்பு, சமாதானம், நித்திய மகிழ்ச்சி அங்கு உண்டு. அந்தத் தேசத்தைச் சுதந்தரித்து, அதிலுள்ள சகல நன்மைகளையும் ஆண்டு கொள்வதற்குத் தகுதி உடையவர்களாய் மாறுகிறோம்.

நமக்காக இந்தப் பூமியிலே மனு அவதாரம் எடுத்து வந்து, நன்மைகளைச் செய்து, பின்பு நீச சிலுவையிலே நம் பாவங்களைச் சுமந்து தீர்த்த உன்னத தேவக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, நீ உன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, அவரை நம்புவாயானால், சகல வேதனைகளிலிருந்தும் தப்புவிக்கப்பட்டு, உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்பட்டு, சமாதானத்துடன், காரிய சித்தியுடையவனாய், கர்த்தரின் கிருபையுடன் செழித்து, கர்த்தரின் காணியாட்சிக் காரனாய் மாறி ஆசீர்வதிக்கப்படுவாய்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 கிறிஸ்து இயேசுவின் பணியில்,                       

சகோ.சி. எபனேசர் பால்.