வாழ்வில் உண்டான தோல்வி, தடைகள்,

                                                               குறைகளை மீண்டும் நினைத்து கலங்குகிற நிலைகள் மாற ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெபநேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். இதுவரை என் ஜெபங்களைத் தள்ளாமல் என்னை ஆசீர்வதித்திருக்கிறபடியினால் உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இயேசு கிறிஸதுவே. நீர் ஒருவரே என்னை நலமாய் வாழச் செய்கிற அன்பு தேவன் என்று உம்மைத் துதிக்கிறேன். என் வாழ்க்கையிலே ஆதியிலே உண்டான தோல்விகள் என்னைத் துக்கப்படுத்துகிறது. அந்தத் துக்கம் நான் இரவிலே துாங்க முடியாதபடி என் காரியங்களைச் செவ்வையாய்ச் செய்ய முடியாதபடி மிகுந்த போராட்டமாய் இருக்கிறது. நான் மருத்துவராய் இருக்க வேண்டும் என எண்ணி முயற்சித்தேன். அந்தத் தோல்வி என்னை அதிகமாக வேதனைப் | படுத்துகிறது. இன்று நான் ஒரு மருத்துவராய் இருந்தால் என் வீட்டில் இன்று காணப்படுகிற பொருளாதாரப் பிரச்சனை இல்லாமல் மிகுந்த சமாதானத்தோடு வாழ்ந்திருக்க முடியுமே என்ற எண்ணங்கள் வருகிறது. அதைப் போல நான் ஒரு இன்ஜினியரிங் படிப்பு படித்திருந்தால் என்னுடன் படித்து பல ஆயிரம் சம்பளம் வாங்குகிறவர்களைப் போல நலமாய் வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணங்கள் என் அமைதி நிறைந்த வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது. சரியாக படிக்காத படியால் ஒரு சின்ன வேலையிலே அமர்ந்திருக்கிறேன். என் அதிகாரிகள் சொல்லும் எல்லா வேலைகளையும் நான் செய்ய வேண்டியதிருக்கிறதே என்று உள்ளம் உடைந்து விடுகிறது. இயேசு கிறிஸ்துவே, இவ்வாறு இவைகளை நினைக்கும்போதெல்லாம் நான் வாழ்வதினால் என்ன பிரயோஜனம் என்ற எண்ணம் தோன்றுகிறது. சில நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள என் உள்ளம் எனக்குள் துாண்டுகிறது. என் தோல்வியினாலும், தடையினாலும் நான் இவருக்கு/இவளுக்குத் துணையாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதே என்று மிகுதியாய்க் கலங்குகிறேன். உம்முடைய ஆறுதலின் வார்த்தைகள் என்னை அடிக்கடி தேற்றுகிறது. தாவீது சொன்னதுபோல நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும் என்ற வார்த்தைகள் என்னைத் தேற்றுகிறது. முந்தினவைகளை நினைக்க வேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம், இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். அது இப்பொழுதே தோன்றும். நான் வனாந்தரத்திலே வழியை உண்டுபண்ணுவேன் என்ற வாக்கின்படி என் உள்ளத்தில் சமாதானம் பெருகச்செய்யும். தொடர்ந்து என்னை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.