“கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;

                                                                                                                             அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்."   

                                                                                                                                                                                                 சங்கீதம் 121:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

எங்கள் பகுதியிலே எலெக்ஷன் நடைபெற இருந்தது. ஆகவே வீட்டிற்கு மிக அருகாமையில் போகிற வருகிற வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்தார்கள். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் கொண்டுச் செல்லக்கூடாது என்று நிபந்தனையும் இருந்தது. அந்நாட்களில் இடையப்பட்டியில் விடுதலை ஜெபமுகாமில் தங்கியிருந்த என்னுடைய மகன் இம்மானுவேல், அங்குள்ள செலவிற்காக 50,000 ரூபாய் என்னிடத்தில் இருந்து வாங்கிச் சென்றான். மோட்டார் சைக்கிளில் சென்ற என் மகனை நிறுத்தி, போலீசார் எவ்வளவு ரூபாய் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டபோது, 50,000 ரூபாய் என்று என் மகன் சொன்னதினால் அந்த ரூபாய் கட்டை வாங்கி அவர் எண்ணினார். 49,500 ரூபாய் தான் இருக்கிறது என்று பணத்தை எண்ணிய அவர், மற்றொருவரை எண்ணச் சொன்னார். அவரும் எண்ணிவிட்டு 49,500 ரூபாய் தான் இருக்கிறது என்று கூற, என் மகன் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தான் வசித்து வந்த 30 கி.மீட்டர் தொலைவில் இருந்த இடையப்பட்டிக்குச் சென்று விட்டான். என் மகன், 50,000 ரூபாய் என்று அப்பா சொன்னார்கள், ஆனால் போலீஸ் எண்ணிப் பார்த்ததில் 49,500 ரூபாய் தான் இருந்தது என்று போலீஸ் சொன்னதைக் கேட்டு என்னிடத்தில் கேட்டான். அவன் மீண்டுமாய் எண்ணின போது, அதில் 50,000 ரூபாய் இருந்தது.

நம்முடைய தேவனின் செயலே மேன்மையானது . அவருடைய அன்பு செயலாலே நாம் ஒன்றையும் இழந்து போகாத படி நம்மைக் காத்து நடத்துவார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                                      சகோ. C. எபனேசர் பால்.