சிந்தி செயல்படு

                              " நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து , உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
நான்
உன்னைவிட்டு விலகுவதுமில்லை,உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே ." எபிரேயர் 13:5

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் .

        இன்று மனிதன் தன்  வாழ்க்கையிலே கைவிடப்படுவதினால் நினையாத வேதனைகளும் பாடுகளும் அனுபவிக்கிறான்.
நம்முடைய கர்த்தரோ நம்மை நேசிக்கிறார்.அவர் தாம் சொன்ன வார்த்தையின்படியே நம்மை கைவிடாது ஆதரித்து ஆசிர்வதிக்கிறவராய் இருக்கிறார்.

        ஒரு முறை மிகுந்த பண நெருக்கடி ஊழியத்தின் பாதையிலே வந்தது. கடன் தொல்லையின்  மிகுதியினால் என் வாழ்வில் உபா.15:6ல்
' கர்த்தர் உன்னை  ஆசீர்வதிப்பதினால் , நீயோ கடன் வாங்குவதில்லை' என்ற வார்த்தையை விசுவாசித்து வாழ்க்கையையும் ஊழியத்தையும் நடத்தி வந்தேன்.
நினையாத விதத்தில் அலுவலகத் தேவைகள்,"ஜெபத்தொனி " புத்தகம் அனுப்பவேண்டிய ஸ்டாம்புகள், இதரச்  செலவுகளுக்கு ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது.
ஊழியம் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு ஒருபோதும் இல்லாத பணநெருக்கடி ஏற்பட்டது. இது என் விசுவாச ஊழியத்தின் பாதையிலே
அதிர்ச்சியாக இருந்தது. நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் என்ற வார்த்தையின்படி, அவரை விசுவாசித்து
என் ஊழியத்தின் பாதையில் என் ஓட்டத்தை ஓடினேன்.

          அன்று இரவிலே என்னென்ன காரியங்கள் கர்த்தருக்குப் பிரியமில்லாதபடி செய்தேன் என்று ஆராய்ந்து, உணர்ந்து மன்னிப்பைக் கேட்டேன்.
வெகுவாய் மன்னிக்கிறவரும், மகா  கிருபையுள்ளவருமான கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  அடுத்தநாளே ஒரு ஆச்சரியமான அற்புதத்தைச் செய்தார்.

          சிறு வயதிலிருந்தே எனக்கு அறிமுகமான ஒருவர் ஊழியத்தின் அலுவலகத்தில் 'SOFTWARE PROGRAMMER ' ஆக  இருந்தவர்,
அமெரிக்க தேசத்தில் பணியேற்று சென்றவர், என் தேவைகளைச்  சந்திக்கத்  தக்கதாக பணத்தை அனுப்பிய போது ,
கர்த்தர் எத்தனை நல்லவர் என்பதை அறிந்து உணர்ந்தேன்.

         அவர் அதனதின்  காலத்தில் நேர்த்தியாய் செய்கிற தேவன் , உங்கள் பிள்ளைகளின் படிப்பு, திருமணம், தொழில் ,
வீடு கட்டும் செலவு இன்னும் எந்த தேவையாக இருந்தாலும், அதை நேர்த்தியாய் சந்திப்பார்.

                                                                                                  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக .
                                                                                                                                                                                   சகோ .சி.எபனேசர் பால்