சிந்தி செயல்படு
"...உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் ."
மீகா 7:15
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். இந்தப் புதிய ஆண்டைக் காணச் செய்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை முழுமையாய் ஆசீர்வதிப்பாராக.
நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ஒரு ஆசிரியர் என்னிடத்தில் வந்து எனக்கு transfer கொடுத்து விட்டார்கள். எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்று கூறினார். நீங்கள் கலங்க வேண்டாம் , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு அற்புதம் செய்வதைக் காண்பிர்கள் என்று அவருக்கு கூறிவிட்டு ஆகஸ்ட் மாதமே நீங்கள் இதே பள்ளிக்கு திரும்ப வருவதாகப் பார்க்கிறேன் என்று சொல்லி ஒரு ஜெபத்தை அவருக்காக ஏறெடுத்தேன் . வாக்கு மாறா தேவன் , தாம் வெளிப்படுத்தியபடியே காரியத்தைச் செய்தார். கணிதப்படிப்பைப் படித்துக் கொடுக்கும் ஆசிரியர் அருகில் இருந்த பள்ளிக்கூடத்திற்குத் தலைமை ஆசிரியராக சென்றபடியால் , கணித ஆசிரியரின் பதவிக்கு ஆசிரியர் தேவைப்பட்டது. எந்த ஆசிரியர் பணிமாற்றம் செய்யப்பட்டு இருந்தாரோ , அவரே மீண்டும் அந்த இடத்திற்கு , நான் பணி செய்த பள்ளியிலே ஆசிரியரானார்.
இந்த ஆண்டில் எனக்கு என்ன ஆகுமோ என்று பணியில் transfer-க்காக , பணி கிடைப்பதற்காக அல்லது வேறு பணி கிடைப்பதற்க்காக அல்லது வேறு எந்தக் காரியமோ நடைபெற வேண்டும் என்று காத்திருக்கும் தேவப்பிள்ளையே , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைத்துக் கொண்டு அவரிடம் உங்கள் காரியங்களைத் தெரிவியுங்கள். எல்லா ஜனங்களையும் நேசிக்கிற இயேசு கிறிஸ்து உங்களில் அற்புதம் செய்து, உங்கள் மனவிருப்பத்தின்படியே அதிசயம் செய்வார். இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என்று கலங்கிட வேண்டாம்.தடைகளை நீக்கி , சுற்றிலும் உள்ள சத்துருக்களை அதமாக்கி ஆசிர்வதியம் உன்னத தேவன் அதிசயம் செய்வதைக் காண்பீர்கள்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ.C.எபனேசர் பால்