சிந்தி செயல்படு
''உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.''
1 தெசலோனிக்கேயர் 5:24
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன் .
ஒருமுறை ஒரு சகோதரர் தனக்கு வேலை கிடைக்க வேண்டும், கடந்த காலத்தில் கிடைத்த வேலையிலே ஒருசில மாதம்தான் வேலைசெய்ய முடிந்தது. ஏன் என்று எனக்குத் தெரியவில்ல. வேலைக் கிடைக்க ஜெபியுங்கள் என்றார். நான் அந்தச் சகோதரனுக்காய் ஜெபித்தபோது, எந்த உலகப் பிரகாரமான வேலையும் உங்களால் செய்ய இயலாது. கர்த்தர் உங்களை ஊழியத்திற்கென்று முன் குறித்துள்ளார் என்பதைக் கூறினேன். அவர் நான் தகுதி அற்றவன் என்று கூறினார். தகுதி அற்றவன் என்று சொல்வதினால் நீ தகுதியுடையவன் என்று கர்த்தருடைய ஆவியானவர் கூறி அவரை ஊழியத்தின் பாதையில் நடத்தினார். அவரும் போதகரான தகப்பனின் ஆலோசனைப்படி வேதாகமக் கல்லூரியில் படித்து, திருச்சபையில் பணிசெய்ய ஆரம்பித்தார். கர்த்தரும் ஆவியின் வரங்களால் நிறைத்து பயன்படுத்தி வருகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய தேவன் நம்முடைய வாழ்நாளை அறிந்தவர். இன்றைக்கும் ஜீவிக்கிறார். யாரை முன் குறித்தாரோ, அவர்களை அழைக்கவும் செய்கிறார். உன்னை அழைக்கிற கர்த்தாதி கர்த்தரின் சமுகத்திலே உன் விருப்பத்தின்படி அல்ல. அவருடைய அநாதி தீர்மானத்தின்படி உன்னை அர்பணித்தால், அவர் உன்னை அலங்கரித்து, ஆவியின் வரங்களினால் முடிசூட்டி பயன் படுத்துவார். உன் சுய நீதியினாலும் பயத்தினாலும் வீணான எண்ணங்களுக்கு இடம் கொடாதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். அவர் சித்தத்தின்படி உங்களை கரம் பிடித்து நடத்துவார்.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
சகோ.C. எபனேசர் பால்.