சிந்தி செயல்பாடு

"கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்."

II தெசலோனிக்கேயர் 3:3

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

      ஒரு குடும்பத்தார் U.S.A. ல் நிரந்தர விசா கிடைக்கக் காத்திருந்தனர். கடைசியில் அவர்கள் அந்த Green Card-ஐ பெறுவதற்கு வேண்டிய ஆவணங்கள் எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் அவர்களின் வக்கீல் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்ததால், மீண்டும் எல்லா ஆவணங்களையும் ஆயத்தப்படுத்தி வக்கீலுக்கு அனுப்பினார்கள். ஆனால் அந்த சகோதரர் எதனால் நிராகரிக்கப்பட்டது என்று கணிப்பொறியில் பார்த்தபோது, அவருக்கும் அவர் வீட்டாருக்கும் Green Card sanction ஆகி இருந்தது. அவர் உடனே வக்கீலுக்கு அதைக் கூறியபோது, அது எப்படி நடக்கும் என்று அவரும் அதைப் பார்த்தார். அவர்களுக்கு அது கிடைப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

     இன்று பல காரியங்களுக்கு மனுசெய்து காத்திருக்கும் சகோதரனே, சகோதரியே, உன்னை அழைத்தவர், உன்னை நேசிக்கிறவராக இருக்கிறார். கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்க் கிரியைச் செய்கிற வல்லமை யுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உனக்காக யாவையும் நலமாக செம்மையாக, நம்மையாக செய்து முடிப்பார். தாமதித்தாலும் கலங்காதே. அவர் அற்புதம் செய்வார்.

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். 

சகோ. C.எபனேசர் பால்.