சிந்தி செயல்படு

"அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்."

சங்கீதம் 91:15

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

முதுநிலை (M.Sc.) படிக்கும் மாணவரின் வாழ்வில் ஒரு போராட்டமான மனநிலை ஏற்பட்டது. அவனின் Guide விபத்துக்குள்ளாகிவிட்டார். அத்துடன் அந்தக் Guide -ன்  தாயார் மரித்து விட்டதால் 5 வாரம் விடுமுறை எடுத்துவிட்டார். அந்த Guide-ன் இரண்டு மாணவர்களுக்கும், இன்னும் ஒரு செமஸ்டர் உங்கள் படிப்பை extend பண்ணுங்கள் என்று கூறி விட்டார்கள். மிகுந்த துக்கமும் துயரமும் நிறைந்த நிலை. என்ன செய்வது என்றே புரியாத போராட்ட நிலை. Thesis எழுதி கொடுத்த சந்தோஷமெல்லாம் மறைந்து போய்விட்டது. ஆனால் கர்த்தர் சொன்ன வாக்குறுதியைப் பிடித்துக்கொண்டு அந்த குடும்பம் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். எல்லா correction -ம் செய்து கையெழுத்தும் வாங்கி submit பண்ணவேண்டிய முன்தினம், அவனின் Guide, submit பண்ணின எல்லா thesis பேப்பரையும் திருத்தி கொடுத்துவிட்டார்கள். என்ன என்ன பிழைத்திருத்தம் செய்ய வேண்டியிருந்ததோ அதையெல்லாம் செய்து கையெழுத்து வாங்க வேண்டியவர்களிடம் கையெழுத்தை எல்லாம் வாங்கி, அன்றே புத்தகவடிவாக பைண்டு செய்ய கொடுத்து, அடுத்தநாளில், அதாவது கடைசி நாளில் submit செய்துவிட்டான். மேலும் அதற்கு 99% மார்க் கொடுக்கப்பட்டது,

அன்பு சகோதரனே/சகோதரியே, இனி ஒன்றும் செய்ய முடியாது என்று எந்த காரியத்திலேயும் கலங்காதே. கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, ஜெபத்தை கேட்கும் தேவன் அதிசயம் செய்வார். அத்துடன் உன்னை மகிழ்ச்சியினால் முடி சூட்டுவார். மேன்மையும் கனமும் உமக்கு உண்டாகும். 

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.