"நம்முடைய கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவினாலே

நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்."

1 கொரிந்தியம் 15:57

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நான் ஆசிரியராக பணியாற்றிய நாட்களில் ஒரு ஆசிரியர் தன் மகனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். ஜெபத்தில் நம்பிக்கை கொண்ட புறமதஸ்தர் அவர். என் மகன் Engineering இறுதி ஆண்டு படிக்கிறார். கல்லூரிக்கு இப்பொழுது ஒழுங்காக செல்லமாட்டேன் என்கிறான். தேர்வுநாளும் நெருங்கிவிட்டது என்றார். நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து ஸ்தோத்திரம் சொல்லி, உங்களால் இயன்ற வார்த்தைகளால் கர்த்தருக்கு உங்கள் காரியத்தைத் தெரியப்படுத்துங்கள் என்றேன். உண்மையாக இதைச் செய்தபோது அதிசயமாய் கர்த்தர் நடத்தினார். இவனின் குழுவில் உள்ள மாணவர்கள் தங்கள் record note -யை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய நாள் நெருங்கினது. இந்த ஆசிரியரின் மகனோ Practical வகுப்புக்குச் சரியாக செல்லாதவன். இவனது Practical record நோட்டை முடித்தால் தான் இந்த Group மாணவர்கள் தங்களது நோட்டைக் கொடுக்க முடியும். ஆகவே இந்த மாணவர்களே இவனது நோட்டை வாங்கி, எல்லாவற்றையும் சரியாக முடித்து மொத்தமாக Professor- டம் கொடுத்தார்கள். அவரும் அதை வாங்கி தனது கையொப்பம் இட்டார். Practical தேர்வு நாளில் சற்று தாமதமாகத்தான் Lab சென்றான். ஒரே ஒரு Practical test கேள்வி தான் இருந்தது. அந்த ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்திருந்தது. எளிதாய் செய்து நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றான். கர்த்தர் பெற்றோரின் ஜெபத்தைக் கேட்டார்.

அருமையான சகோதரனே, சகோதரியே, உங்கள் பிள்ளைகளின் வாழ்வில் உள்ள போராட்டங்கள், குறைகளைக் குறித்து கலங்காதீர்கள். ஜெபத்தைக் கேட்கும் தேவனுடைய சமுகத்தில் ஸ்தோத்திரத்துடன் காரியங்களைத் தெரிவியுங்கள். அவர் அதிசயமாய் காரியங்களைச் செய்வார். நீங்கள் நினையாத வெற்றியை, மேன்மையை அவர் அருளிச் செய்து ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.