"...அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்."

                                                                                                                                               1பேதுரு 2:24

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

             கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

             ஒரு முறை 'ஹலிபெரியா' என்ற கேரளா மாநிலத்தில் உள்ள டீ எஸ்டேட்டில் நற்செய்தி கூட்டம் நடைப்பெற்றது. சி.எஸ்.ஐ ஆலய போதகர் REV. SEBASTIN ஒழுங்கு செய்திருந்தார்கள். கஜேந்திரன் என்ற வாகன ஓட்டி ஒருவர் தன் நண்பர் sobal என்றவர் வீட்டுக்கு ஜெபிக்க அழைத்தார்கள். சரி என்று அந்த நண்பர் வீட்டாருக்கு ஜெபிக்கச் சென்றேன். தங்களின் சிறு குழந்தைக்காக ஜெபிக்கச் சொன்னார்கள். ஜெப நேரத்தில் கர்த்தரின் ஆவியானவர் ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார். கர்த்தாவே, இந்த பிள்ளையின் இருதயத்தில் உள்ள துவாரத்தை நீர் குணமாக்குகிறபடியால் ஸ்தோத்திரம் என்று ஜெபிக்க வழி நடத்தினார். ஜெபம் முடிந்தபின் அந்த வீட்டாரைப் பார்த்து இந்தக் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் இருந்தது. கர்த்தர் உங்களை நேசித்து அந்த வேதனையை நீக்கி விட்டார். பிள்ளை குணமடைந்துவிட்டது என்றேன். அந்த வீட்டார், ஆம் மருத்துவர் இந்தப் பிள்ளையின் இருதயத்தில் ஒரு சிறிய துவாரம் இருக்கிறது. இதை அறுவைச் சிகிச்சையில்தான் குணமாக்க முடியும் என்றார் என்று கூறினார்கள்.

             நமக்காக ஜீவ பலியான இயேசு கிறிஸ்து நம்மை நேசித்து நம்மை குணமாக்குகிறவராக இருக்கிறார். நேற்றும் இன்றும் என்றும் மாறாத ஆற்றலையுடைய இயேசு கிறிஸ்து, உன் வேதனைகளை நீக்கி உன்னை குணமாக்க வல்லவராக இருக்கிறார். 'அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்...' என்ற மத்தேயு 8:17ன் படி உங்களில் அற்புத சுகத்தைத் தர வல்லவராக யிருக்கிறார். அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று நீ அவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, விசுவாசிப்பாயானால் அவரின் அற்புத சுகத்தை இன்றே இப்பொழுதே பெறுவாய். அவர் தமது வார்த்தையில் மாறாதவர். அவர் நம் மேல் வைத்த அந்த பெரிய அன்பினால் உங்களில் இன்றே அற்புதத்தையும், அதிசயத்தையும் செய்து உங்களில் சுக வாழ்வை மலரச் செய்வார்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.