"...தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்..."

                                                                                              மத்தேயு 7:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒருமுறை ஒரு குடும்பத்தாரோடு சிறிது நேரம் செலவிடவும், ஜெபிக்கவும் சென்றோம். அந்த வீட்டின் தலைவரோ தன் தகப்பனார் எழுதி கொடுத்த உயில் காணாமல் போய்விட்டது என்று மிகவும் கலங்கினார். அத்துடன் அவருக்கு வியாதி ஏற்பட்டு மிகவும் துயரமடைந்தனர். இந்த உயிலை யாராவது எடுத்து போயிருப்பார்களோ என்று உள்ளத்தில் கேள்வியும் எழும்பியது. அவர்களுக்காய் ஜெபித்த நேரத்தில் அந்த உயில் இங்குதான் இருக்கிறது. யாரும் அதை எடுத்து செல்லவில்லை என்று கூறி வீடு திரும்பினோம். அந்த வீட்டார் சில மாதம் கழித்து, வேறொரு முக்கியமான கவரை எங்கேயோ வைத்து விட்டோமே என்று அதை தேடியபோது தகப்பனார் எழுதிக் கொடுத்த உயிலைக் கண்டுபிடித்தார்கள். கர்த்தர் சொன்னபடியே அந்த உயிலைக் கண்டுபிடிக்க முடிந்தது.

அன்பு சகோதரனே/சகோதரியே, நம்முடைய வாழ்க்கையிலும் அப்படித்தான், கவலை கோபம் நிறைந்து நம்முடைய உடைமைகளைத் தேடும்போது, பெற்றுக்கொள்ள வேண்டிய காரியத்தைக் கண்டுபிடிக்க முடியாதபடி போய்விடுகிறது. நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை நாம் முழுமனதோடு தேடும்போது, முழுமனதோடு ஆராதிக்கும்போது, முழுமனதோடு நம்பும்போது, நமக்குரிய முக்கியமான உடைமைகள் பத்திரமாய் காக்கப்படுவதோடு, ஏற்ற வேளையிலே கிடைக்கச் செய்வார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே எதையாவது கண்டுபிடிக்க முடியவில்லை என்று சோர்ந்து போகாது, முழு உள்ளத்தோடு தேடும்போது, கர்த்தர் கிடைக்கச் செய்வார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ.சி. எபனேசர் பால்