''…கர்த்தரைத் தேடினோம்,தேடிபோது,

                  சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்,

                      அப்படியே கட்டினார்கள், அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.'' 

                                                                                                             2 நாளாகமம் 14:7

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

           கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

         ஒருமுறை காலஞ்சென்ற சகோதரர் சாம் ஜெபத்துரை, மற்றும் சகோ.மோகன்.சி.லாசரஸ், இன்னும் காலஞ் சென்ற சங்கர் நடத்திய கூட்டத்திற்கு சென்றேன். இக்கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.கூட்டத்தில் சில நிமிடங்கள் பேசிய நான் கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு ஜெபிக்க ஆரம்பித்தேன்.ஜெபிப்பதற்கு அநேகர் முன் வந்திருந்தனர். ஒரு சகோதரருக்கு ஜெபிக்கும்போது சாத்தான் உன் வெளிநாட்டு வேலையில் சேர முடியாது தடைசெய்து விட்டான். இன்று முதல் கர்த்தரைத் தேடுங்கள். தடைநீங்குவதை காண்பீர்கள் என்று ஜெபிக்க கர்த்தர் கிருபைபுரிந்தார்.ஜெபம் முடிந்தபின்U.S.A ல் வேலை கிடைத்தும் சில ஆண்டுகளாக விசா கிடைக்கவில்லை என்பதை அந்த சகோதரர் தெரிவித்தார். அன்று முதல் அவர் கர்த்தரைத் தேட ஆரம்பித்தார்.அந்த மகனுக்கு மறுபடியும் U.S.A ல் வேலை கிடைத்தது.இந்த முறை அவருக்கு விசா எளிதாக கிடைத்துவிட்டது.நானும் ஊழியம் செய்ய U.S.A சென்றிருந்த போது அவரது வீட்டில் ஒரு ஜெபக்கூட்டம் நடைபெற்றது.அதில் அவரின் சாட்சியைப் பகிர்ந்து கொண்டார் .

      அன்பு சகோதரனே,சகோதரியே,உன் வாழ்வில் உண்டான தடையினால் நீ வேதனையோடே தவித்துக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே. தடைகளை நீக்குகிற கர்த்தர் இருக்கிறார். இன்று முதல் அவரையே முன் வைத்துக் கொள்ளுங்கள்.முழு மனதுடன் தேடுங்கள். தடைகள் நீங்கிவிடும். ''தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்.அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட் பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்.'' மீகா 2:13-ன் படி எல்லாத் தடைகளும் நீங்கி ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க கர்த்தர் முன்னே போகிறார்.

        கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

   சகோ.சி. எபனேசர் பால்.